Saturday, September 8, 2012

'மாமனிதன்' மம்முட்டி

சமீபத்தில் சிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற்சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ 35 லட்சம் மதிப்புள்ள அக்னிஜித் என்ற மருந்தை இலவசமாக அளித்து உதவியுள்ளார் நடிகர் மம்முட்டி.

சிவகாசி விபத்து குறித்து தமிழ் ஹீரோக்களோ?, அரசியல்வாதிகளோ கூட கண்டுகொள்ளாத நிலையில், தாமாக முன்வந்து மம்முட்டி செய்துள்ள இந்த மாபெரும் உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் அக்னிஜித் என்ற மருந்து ரொம்ப பிரபலம். இந்த மருந்துக்கம்பெனிக்கு சிவகாசி மருத்துவமனை அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமாக அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன்", என்றார்.

இவரல்லவோ நிஜமான சூப்பர் ஸ்டார்.
"என்னை வளர்த்து ஆளாக்கிய தமிழ் மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று கூட்டத்துக்குக் கூட்டம் புலம்பும் நம்ம சூப்பர் ஸ்டார்கள் எங்கய்யா போனாங்க?

1 comment:

  1. மரியாதைக்குரியவரே,வணக்கம். கெடுதல் அல்லது தவறான எண்ணம் உள்ளவங்க பற்றி நமக்கு கவலை வேண்டாங்க! மரியாதைக்குரிய மம்முட்டி ஐயா போன்றோர்களை பாராட்டவாவது கள்ளுக்கொள்வோமாக.என PARAMES DRIVER - THALAVADY-ERODE Dt.

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...